ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

தவக்கால சிந்தனை: பள்ளிக்கூடம் கல்வி பயிலும் கோவில்

Published On 2022-04-01 04:06 GMT   |   Update On 2022-04-01 04:06 GMT
வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை நீங்கள் கற்று கொள்ளுங்கள்.
நான் கள்ளங்கபடின்றி கற்றேன். கற்றதை முறையீடின்றி பிறரோடு பகிர்ந்து கொண்டேன். அதன் செல்வத்தை நான் மறப்பதில்லை(சாஞா 7:13)

ஒரு மாணவனுக்கு சரியான நேரத்தில்சரியான செயலை கற்றுக்கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம். ஊக்கமுடமை, நன்னடத்தை, நேரம் தவறாமை, தூய்மை உடைமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் இடமாக பள்ளிக்கூடம் திகழ்கிறது. உங்களை நீங்கள் மதிக்கும் மன உணர்வை பயன்படுத்துங்கள். அது போன்று நண்பர்களையும், அதிகாரிகளையும் மதியுங்கள். மென்மையான செயல்களின் மூலம் நல்லதை பற்றி சக மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். வகுப்பு தொடங்கும் நேரத்தில் இருந்து வகுப்பு முடியும் வரையும் எல்லா சூழல்களிலும் முழுமையாக பள்ளிக்கூடத்தில் இருந்து பல காரியங்களை நீங்கள் கற்று கொள்ளுங்கள். காலம் தாழ்த்தாமல் வகுப்புக்கு சென்று வருவது நல்ல பழக்கம்.

காலம் குறித்த அர்ப்பண உணர்வு, அமைதி, நுண்மதி, சாந்தம், தன்னம்பிக்கை போன்றவை நம்மை வளர உதவி செய்யும். எனவே முடிந்த அளவுக்கு ஆற்றலோடு நல்லுறவை பேணி பள்ளிக்கூடத்தில் இருந்து எந்த அளவுக்கு பல நல்லதை கற்றுக்கொள்ள முடியுமோ, எவ்வளவு நெறிமுறைகளை உள்வாங்கி கொள்ள முடியுமோ அவை அனைத்தையும் கற்றுக்கொள்ள முயற்சி எடுங்கள்.

வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் வரை அமைதியாக உங்கள் இடத்தில் எழுந்து நின்று காத்திருங்கள். முதலில் வெளியே செல்வதற்கு நெருங்கி பிடித்து போக வேண்டாம். பள்ளி அரங்கில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுங்கள். கூட்டம் நடைபெறும் போது மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதத்தில் மகிழ்ச்சியுடன் எல்லா நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள். தேர்வு நேரங்களில் முழுமையாக படித்து தேவையானவற்றை மட்டுமே எழுதுவதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News