ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் தவக்கால சிலுவை பயணம்
இன்று பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருஇருதய சகோதரர்களின் இல்லத்தில் இருக்கிற கிறிஸ்து அரசர் ஆலயம் நோக்கி செல்கிறார்கள்.
பாளையங்கோட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களின் தவக்கால சிலுவை பயணம் நடைபெறுகிறது. கிறிஸ்தவர்களின் வாழ்வில் தவக்காலம் மிக முக்கியமான காலம் ஆகும். 40 நாட்கள் ஆண்டவரின் மன்னிப்பையும், அருளையும் கூடுதலாக பெறும் காலமாக கருதப்படுகிறது. அத்தகைய தவக்காலம் கடந்த 2-ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.தொடர்ந்து நோன்பு இருத்தல், புனித ஸ்தலங்களுக்கு செல்லுதல், ஜெபித்தல், நோயாளிகள், ஆதரவற்றவர்களை சந்தித்து உதவி செய்தல் போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே தவக்கால சிலுவை பயணம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருஇருதய சகோதரர்களின் இல்லத்தில் இருக்கிற கிறிஸ்து அரசர் ஆலயம் நோக்கி செல்கிறார்கள். இந்த சிலுவை பயணத்தை பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு குழந்தை ராஜ் அடிகளார் தலைமை தாங்கி வழிநடத்துகிறார். இதில் பங்குத்தந்தையர், துறவியர்கள், இறை மக்கள் உள்ளிட்டோர் சிலுவை தாங்கி பயணம் மேற்கொள்கிறார்கள். முடிவில் திருஇருதய சகோதரர்கள் இல்ல மைதானத்தில் திருப்பலியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து ஏப்ரல் மாதம் 14-ந்தேதி பெரிய வியாழனும், 15-ந்தேதி புனித வெள்ளியும் கடை பிடிக்கப்படுகிறது. 17-ந்தேதி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையே தவக்கால சிலுவை பயணம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் பேராலயத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருஇருதய சகோதரர்களின் இல்லத்தில் இருக்கிற கிறிஸ்து அரசர் ஆலயம் நோக்கி செல்கிறார்கள். இந்த சிலுவை பயணத்தை பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு குழந்தை ராஜ் அடிகளார் தலைமை தாங்கி வழிநடத்துகிறார். இதில் பங்குத்தந்தையர், துறவியர்கள், இறை மக்கள் உள்ளிட்டோர் சிலுவை தாங்கி பயணம் மேற்கொள்கிறார்கள். முடிவில் திருஇருதய சகோதரர்கள் இல்ல மைதானத்தில் திருப்பலியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து ஏப்ரல் மாதம் 14-ந்தேதி பெரிய வியாழனும், 15-ந்தேதி புனித வெள்ளியும் கடை பிடிக்கப்படுகிறது. 17-ந்தேதி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.