ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

தவக்கால சிந்தனை: மாணவர்களுக்கு தேவை தலைமைத்துவம்

Published On 2022-03-19 03:56 GMT   |   Update On 2022-03-19 03:56 GMT
மாணவர்களுடைய தலைமை பண்புக்கு தகுதியுடையது செய்வதற்கும், மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கும் கல்வி சாரா கலைகளில் அவர்களுக்கு ஆர்வம் உண்டாகும் வகையில் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது.
நான் ஆடுகள் வாழ்வை பெறும் பொருட்டு அதுவும் நிறைவாக பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரை கொடுப்பார்(யோவான் 10:10,11)

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், கல்வியியல் என ஆயிரக்கணக்கான கல்லூரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் பேரவை தேர்தல் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது. மாணவர்களுடைய தலைமை பண்புக்கு தகுதியுடையது செய்வதற்கும், மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதற்கும் கல்வி சாரா கலைகளில் அவர்களுக்கு ஆர்வம் உண்டாகும் வகையில் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது. மேலும், பிரச்சனைகளை அவர்களுக்குள் தீர்த்து கொள்வதற்கும் பேரவை தொடங்கப்பட்டது.

இவை புறக்கணிக்கப்படுவதால் எதிர்கால சமூகத்தினரிடையே பல நல்ல தலைவர்கள் இனம் கண்டுபிடிக்க முடியாமல் போகிறார்கள்.

அன்றைய காலக்சூழலில் கட்சியோடு இணைந்து பல நல்ல தலைவர்கள் உருவாவதற்கு கல்விக்கூடங்கள் காரணமாக இருந்தது. இன்று அவை அனைத்துமே மறுக்கப்படுகிறது. இதனால் பல நன்மை தனங்கள் இந்த சமூகத்திலிருந்து அகற்றப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு ஆற்றல்களோடும், திறமைகளோடும் கல்விக்கூடங்களுக்கு நுழைகிறார்கள்.

அவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் சரியாக இனங்கண்டு அவர்களை தூக்கி நிறுத்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு கல்விக்கூடங்கள் உதவி செய்ய வேண்டும். ஆனால் இவை புறக்கணிக்கப்படுவதால் மாணவர்கள் தங்களது வாழ்வை கூட பல நேரங்களில் இழப்பதற்கு காரணமாக அமைகிறது. அடையாளம் காட்டப்படாததால் அவர்கள் பல நேரங்களில் தங்களுக்குள்ளாகவே மோதிக்கொண்டு பல தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகும் நிலை மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுவது மிகுந்த வேதனைக்குரிய செயலாகத்தான் இருக்கிறது.

-அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News