ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனித வியாகுல அன்னை ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-03-05 03:54 GMT   |   Update On 2022-03-05 03:54 GMT
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் மறைசாட்சி தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி நடந்தது.

இதில் கம்ளார் பங்குத்தந்தை பென்ஹர் தலைமையில், ஆர்.ஆர்.நகர் பென்சிகர் அருளுரையாற்றினார். மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு, கொடி நேர்ச்சை, ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடந்தது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து திருவிழா கொடியேற்றம் நடந்துது. தொடர்ந்து நடந்த திருப்பலியில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை தாங்கி அருளுரையாற்றினார். நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணைபங்குதந்தை ஆன்றனி புருனோ, பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாயமைக்கிள்ராஜ், துனணச்செயலாளர் காயரூபிலெட், பொருளாளர் சகாயபென்சிகர், கோட்டார் மறைமாவட்ட பேரவை உறுப்பினர் ஜேக்கப்மனோகரன், கவுன்சிலர் ஜெனட்சதீஸ்குமார், முன்னாள் பங்கு பேரவை துணைத்தலைவர் பயஸ் ராய், அருட் சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடியேற்று நிகழ்ச்சியின் போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்து.

விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

8-ம் நாள் விழாவில் நற்கருணை பவனியும், 9-ம் நாள் விழாவில் இரவு வாண வேடிக்கையும், தொடர்ந்து தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் விழாவில் திருப்பலியம், மாலை தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயத்தின் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News