ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலயம்

கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலய 32-வது ஆண்டு பிரதிஷ்டை- அசன பண்டிகை

Published On 2022-03-03 03:17 GMT   |   Update On 2022-03-03 03:17 GMT
பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் சீயோன் ஆலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 32-வது ஆண்டு பிரதிஷ்டை-அசன பண்டிகை நடக்கிறது.
பெங்களூரு கே.பி.அக்ரஹாரம் நேதாஜி நகரில் பிரசித்தி பெற்ற சீயோன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 32-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

நாளை காலை 5.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெறுகிறது. இதில், அருட்திரு ஜஸ்டின் யேசுதாஸ் தேவ செய்தி அளிக்கிறார். இன்னிசையுடன் கூடிய தெய்வீக பாடல்களுடன் ஆராதனை நடக்கிறது. இந்த ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத்தினர் கலந்துகொண்டு இறைவனை ஆராதிக்கிறார்கள்.

அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு ‘அசன விருந்து’ சிறப்பு ஆராதனையுடன் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து வழங்கப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை செயலாளர் எஸ்.செல்வராஜ், பொருளாளர் பீட்டர் தங்கதுரை மற்றும் சபை ஆயர் செல்விதாசன், கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஐக்கியம், ஓய்வுபெற்ற பாடசாலை குழு, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்துள்ளனர்.

விழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு சீயோன் ஆலய ஆயர் செல்விதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News