ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனி
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய குடும்ப விழாவின் முக்கிய நிகழ்ச்சியான னிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய குடும்ப விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு குருகுல முதல்வர் அருட்தந்தை ஹில்லாரியுஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து சிங்காரி மேளம் முழங்க புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலஞ்சி பங்கு பணியாளர் அருட்தந்தை மரிய சூசை வின்சன்ட் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலியும், திருக்கொடி இறக்கமும் நடந்தது.
தொடர்ந்து சிங்காரி மேளம் முழங்க புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலஞ்சி பங்கு பணியாளர் அருட்தந்தை மரிய சூசை வின்சன்ட் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலியும், திருக்கொடி இறக்கமும் நடந்தது.