ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மயிலாடி காமராஜர் நகரில் புனித செபஸ்தியார் ஆலயம்: ஆயர் நசரேன் சூசை திறந்து வைத்தார்
மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தை ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து, திறந்து வைத்தார்.
மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து, திறந்து வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார்.
ஆயர் நசரேன் சூசை பேசும் போது, ‘காமராஜர்நகர் மக்களுக்காக, 13 ஆண்டுகளாக யாராலும் செய்ய முடியாத இந்த இறை பணியை, தனது சொந்த செலவில் செபஸ்தியார் ஆலயத்தைகட்டி கொடுத்த கலப்பை மக்கள் இயக்க தலைவரும், இயக்குனருமான பி.டி.செல்வகுமாருக்கு பங்கு மக்கள் சார்பில்பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
அதைத்தொடர்ந்து பி.டி.செல்வகுமாருக்கு நினைவு பரிசு மற்றும் நற்சான்றிதழை ஆயர் நசரேன் சூசை வழங்கி, கவுரவித்தார்.
அதைத்தொடர்ந்து ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது.
விழாவில் ஊர் முன்னாள் தலைவர் ஜான்சன், மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், மயிலாடி தொழில் வர்த்தகர் நல சங்க தலைவர் சுதாகர், மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், அழகப்பபுரம் பங்கு பேரவை துணை தலைவர் விக்டர் நவாஸ், ஸ்பெல்மன், கிங்ஸ்டன், வேதமணி, மூர்த்தி, தங்கம் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான்கென்னடி, ஊர்தலைவர் முத்துகணேசன், செயலாளர் சகாயஅஜிஸ், பொருளாளர் சகாய சுபின்சன் மற்றும் நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டார்.
ஆயர் நசரேன் சூசை பேசும் போது, ‘காமராஜர்நகர் மக்களுக்காக, 13 ஆண்டுகளாக யாராலும் செய்ய முடியாத இந்த இறை பணியை, தனது சொந்த செலவில் செபஸ்தியார் ஆலயத்தைகட்டி கொடுத்த கலப்பை மக்கள் இயக்க தலைவரும், இயக்குனருமான பி.டி.செல்வகுமாருக்கு பங்கு மக்கள் சார்பில்பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
அதைத்தொடர்ந்து பி.டி.செல்வகுமாருக்கு நினைவு பரிசு மற்றும் நற்சான்றிதழை ஆயர் நசரேன் சூசை வழங்கி, கவுரவித்தார்.
அதைத்தொடர்ந்து ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது.
விழாவில் ஊர் முன்னாள் தலைவர் ஜான்சன், மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், மயிலாடி தொழில் வர்த்தகர் நல சங்க தலைவர் சுதாகர், மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், அழகப்பபுரம் பங்கு பேரவை துணை தலைவர் விக்டர் நவாஸ், ஸ்பெல்மன், கிங்ஸ்டன், வேதமணி, மூர்த்தி, தங்கம் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான்கென்னடி, ஊர்தலைவர் முத்துகணேசன், செயலாளர் சகாயஅஜிஸ், பொருளாளர் சகாய சுபின்சன் மற்றும் நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.