ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றுடன் தொடங்கியது
ஈத்தாமொழி அருகில் உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றுடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா, பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
ஈத்தாமொழி அருகில் உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றுடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா, பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்குமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழா வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.
19-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலியும், 7 மணியில் இருந்து தொடர்ந்து திருப்பலிகளும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் பேர்ஜியா, பங்கு பேரவையினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.
19-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலியும், 7 மணியில் இருந்து தொடர்ந்து திருப்பலிகளும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் பேர்ஜியா, பங்கு பேரவையினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.