ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2022-02-02 09:05 IST   |   Update On 2022-02-02 09:05:00 IST
திசையன்விளை அருகே உள்ள உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
திசையன்விளை அருகே உள்ள உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருவிழாவை தொடங்கிவைத்தார்.

திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடக்கின்றது. 13-ம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பெருவிழா கூட்டு திருப்பலியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி, நடத்தி வைக்கிறார்.

தொடர்ந்து சப்பர பவனி நடக்கிறது. கொடியேற்ற விழாவில் உவரி பஞ்சாயத்து தலைவர் தேம்பாவணிபவர் சிங், ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் அந்தோணி அமலராஜா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News