ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழாவில் தேர்ப்பவனி

கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழாவில் தேர்ப்பவனி

Published On 2022-01-05 04:58 GMT   |   Update On 2022-01-05 04:58 GMT
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நடந்தது. இதில் பக்த சபையினர், பாடகர் குழுவினர், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதில் 9 மற்றும் 10-ம் நாள் திருவிழா நாட்களில் தேர்ப்பவனி நடந்தது. 9-ம் நாள் திருவிழாவில் இரவு 10 மணிக்கு ஆலய வளாகத்தில் இருந்து தேர்ப்பவனி தொடங்கியது. நிகழ்ச்சியை பங்குதந்தை சகாய பிரபு ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். தேர் கார்மல் நகர் பங்கின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அதிகாலை 4 மணியளவில் ஆலய வளாகம் வந்தடைந்தது.

10-ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. தேர்ப்பவனிக்கு ஊரின் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பக்த சபையினர், பாடகர் குழுவினர், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

ராமன்புதூர் சந்திப்பில் பங்கு நிர்வாகிகள் தலைவர் ஜோசப் ஆன்டனி, செயலாளர் டூறிங் ஆன்றனி தனிஷ், பொருளாளர் லியோன் ஜேசு ரெத்தினம் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தேர்ப்பவனி மேளதாளத்துடன் இரவு 8 மணியளவில் ஆலய வளாகம் வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பங்குமக்கள் இணைந்து செய்திருந்தனர்.
Tags:    

Similar News