ஆன்மிகம்
புனித சவேரியார்

பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம்

Published On 2021-11-25 04:32 GMT   |   Update On 2021-11-25 04:32 GMT
பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் ஆலய வளாகத்தில் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது.
பாளையங்கோட்டை சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை ஆலய வளாகத்தில் நடந்தது. விழாவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் திருப்பலி நடத்தினார். வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் சகாயஜான் மறையுரை ஆற்றினார்.

மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், பாதிரியார்கள் மை.பா.சேசுராஜ், அன்டோ, உடையார்பட்டி மைக்கேல், ஆயரின் செயலாளர் மைக்கேல் பிரகாசம், மும்பை டேவிட், மதுரை சேவியர் தயாளன், பேராலய பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர்கள் சதீஸ் செல்வ தயாளன், அந்தோணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. 28-ந் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருட்சாதனம், 2-ந் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் தேர்பவனி, 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா, மாலை 6 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப் பூசுதல் நடைபெறுகிறது.
Tags:    

Similar News