ஆன்மிகம்
புனித சவேரியார்

அழகப்பபுரம் அருகே புனித சவேரியார் ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2020-11-26 07:40 GMT   |   Update On 2020-11-26 07:40 GMT
அழகப்பபுரம் அருகே சவேரியார் நகரில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.
அழகப்பபுரம் அருகே சவேரியார் நகரில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருப்பலி ஆகியவை நடக்கிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, அருட்பணியாளர் போஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை போன்றவை நடைபெறும். 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு சேவியர்புரம் பங்குத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ரூபன் மற்றும் பங்கு மேய்ப்புப் பணி குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News