ஆன்மிகம்
அலங்கார உபகார மாதா

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ‘பாக்கும்படி’ நிகழ்ச்சி இன்று நடந்தது

Published On 2020-11-08 14:50 IST   |   Update On 2020-11-08 14:50:00 IST
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ‘பாக்கும்படி’ நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. விழா 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின் விளக்கு அலங்காரம், வாணவேடிக்கை, மெல்லிசை கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் ‘பாக்கும்படி’ நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர், இணை பங்குத்தந்தையர்கள் லெனின், சுரேஷ், பங்குப்பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Similar News