ஆன்மிகம்
அலங்கார உபகார மாதா

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதாவுக்கு வைரமாலை

Published On 2019-12-09 04:40 GMT   |   Update On 2019-12-09 04:40 GMT
தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு மக்கள் சார்பில் மாதா சொரூபத்தில் அணிவிப்பதற்காக 2 அடி உயர வைர மாலை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு மக்கள் சார்பில் மாதா சொரூபத்தில் அணிவிப்பதற்காக 2 அடி உயர வைர மாலை வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை பங்குதந்தை ஜோசப் ரொமால்டு தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாதா சொரூபத்துக்கு வைர மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News