ஆன்மிகம்
புனித சவேரியார்

தூத்துக்குடி சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2019-11-28 03:57 GMT   |   Update On 2019-11-28 03:57 GMT
தூத்துக்குடி தூய சவேரியார் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பங்குதந்தை ஜேசுநசரேன் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி தூய சவேரியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பங்குதந்தை ஜேசுநசரேன் தலைமை தாங்கினார்.

பாதிரியார்கள் ஸ்டாலின், ஜஸ்டின், பிராக்ரஸ், கிங்ஸ்டன், வினித்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தி கொடியேற்றி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 2-ந்தேதி காலையில் திருவிழா திருப்பலி நடக்கிறது.

மாலையில் நற்கருணை பவனி, மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி காலை 6 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் சகாயம் தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது.
Tags:    

Similar News