ஆன்மிகம்
இயேசு

தேவனுடைய ராஜ்யம்

Published On 2019-11-07 03:45 GMT   |   Update On 2019-11-07 03:45 GMT
தேவன் நமக்கு தேவனுடைய ராஜ்யத்தையே தருவார் என்ற நம்பிக்கையுள்ளவர்களாய் வாழ தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென்.
ஒவ்வொரு நாளும் மனிதன் தன் தேவை களுக்காக பல காரியங்களை தேடிக் கொண்டே இருக்கிறான். இன்று நம் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று பல்வேறு வேலைகளை செய்து பணத்தை சம்பாதித்து உணவு, உடை, உறைவிடம் என்று செலவு செய்கிறோம். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் நம்முடைய தேவை பூர்த்தியாகமலேயே உள்ளது. எனவே மேலும், மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

ஆனால் தேவன் என்ன சொல்லுகிறார் என்றால், உங்களுக்கு வேண்டியவைகளையே தேடி அலையாமல் இவைகளை கொடுக்க வல்லமையுள்ள என்னை தேடுங்கள் என்று கூறுகிறார்.

இப்படித்தான் ஒரு நாட்டின் அரசர் தன் மக்களை சந்தித்து அவர்களின் கவலைகள், பிரச்சினைகளை போக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக பொது இடத்தில் ஒரு குறிப்பிட்ட மரத்தடியை தேர்ந்தெடுத்து அங்கு அமர்ந்தார். பின்னர் அதை சுற்றிலும் ஏராளமான கூடாரங்கள் அமைத்து அந்த கூடாரங்களில் உணவு பண்டங்கள், நகைகள், பணம் மற்றும் பல்வேறு பொருட்களை ஏராளமாய் குவித்து வைத்தனர்.

பின்னர் அரசர் மக்களை பார்த்து இந்த கூடாரங்களில் உள்ளவற்றை யார், யாருக்கு என்னனென்ன தேவையோ இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். உடனே மக்கள் எல்லோரும் அவர்களுக்கு தேவையானவற்றை சேகரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபன் மட்டும் அங்கு இருக்கும் எதையும் எடுத்துக்கொள்ளாமல் அரசர் இருக்கும் இடத்தை தேடி வந்தான். உடனே அரசர் அவனிடம் இங்கு இருக்கும் இலவச பொருட்கள் எதையும் நீ எடுக்கவில்லையா? என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர் அரசரே, என்னுடைய நோக்கம் உங்களை காண்பதுதான் என்றான்.

உடனே அரசர் மிகவும் மகிழ்ச்சியாக அந்த வாலிபரை தழுவிக்கொண்டு அப்படியானால் என்னுடைய முழுச் சொத்துக்கும் நீதான் சொந்தக்காரர் என்று கூறி உள்ளார்.

இதைத்தான் வேதாகமம் மத்தேயு 6-ம் அதிகாரம் 33-ம் வசனத்தில் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகள் எல்லாம் உங்களுக்குக்கூட கொடுக்கப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது.

ஆம் தேவ பிள்ளைகளே நாமும் நம்முடைய வாழ்க்கையில் உலக பிரகாரமான காரியங்களுக்காக ஓடிக்கொண்டிருக்காமல் தேவனை சந்திக்கவும் நேரத்தை செலவிடுவோம். அப்போது தேவன் நமக்கு தேவனுடைய ராஜ்யத்தையே தருவார் என்ற நம்பிக்கையுள்ளவர்களாய் வாழ தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென்.

சகோ.ஜே.ஜெயசுதன்,

கிறிஸ்துவின் ஆர்ப்பரிப்பின் ஊழியங்கள், திருப்பூர்.
Tags:    

Similar News