ஆன்மிகம்
இயேசு

பரிசுத்த ஜீவியம் என்றால் என்ன?

Published On 2019-10-10 04:43 GMT   |   Update On 2019-10-10 04:43 GMT
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நம்முடைய ரட்சகரும், மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நம்முடைய ரட்சகரும், மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பரிசுத்த ஜீவியம் என்றால் என்ன? என்பது குறித்து தியானித்து பார்ப்போம்.

நாம் சிருஷ்டிக்கப்பட்டது முதல் கடைசி காலம் வரைக்கும் பரிசுத்தமாய் வாழ வேண்டும். அப்படியில்லை என்றால் தேவனை தரிசிக்க முடியாது என்று வேத வசனம் கூறுகிறது.

ஆனால் நம் இந்த உலகத்தில் பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், பொறாமைகள், பொய்கள், புறங்கூறுதல்கள் போன்ற துர் செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். மேலும் ஒரு வேலையை செய்யும் போது முறுமுறுப்போடும், கடும் கோபத்துடனும் நடந்து கொள்கிறோம். ஒருரை வேண்டாத வம்பு பேசி புத்தீயினமாகவும், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் பேசி திட்டிக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இவற்றையெல்லாம் நம்மிடத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டும். எப்படி மாற்றுவது என்றால், நாம் நன்மை செய்வதில் ஞானிகளாகவும், தீமைக்கு புறம்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். கர்த்தர் நம்மோடு வாசம் செய்ய வேண்டுமானால் நாம் பிறருக்கு தீமையை அல்ல நன்மையே செய்ய வேண்டும். பரிசுத்தமாக தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும். தேவ பயத்தோடே யாவரோடுங்கூட அன்பும், சமாதானமாய் வாழ வேண்டும். எந்நேரமும், எந்த வேளையிலும் கிறிஸ்து இயேசுவினுடைய சிந்தையே நம்மிலும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வதால் தான் தேவனுடைய பரிசுத்த ஜீவியமாக இருக்க முடியும்.

இதுகுறித்து வேதாகமத்தில் 1 பேதுரு 1-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் ‘நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த தவக்காலத்தில் இயேசுவை பற்றி தியானித்து வரும் நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, முன்பு அறியாமையால் செய்து கொண்டிருந்த துர்செயல்களின் படி இனி நடவாமல், தேவனுக்கு கீழ்படிகிற பிள்ளைகளாய் இருக்க வேண்டும். நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ளவராய் இருக்கிறது போன நாமும் அவருடைய வழியில் நடந்து பரிசுத்தமாய் இருக்க அதிகமாய் முயற்சிப்போம்.

சகோதரி: ரூத்பிமோராஜ், கே.ஜி.கார்டன், திருப்பூர்.
Tags:    

Similar News