ஆன்மிகம்
மனிதனின் உண்மையான முகம்

மனிதனின் உண்மையான முகம்

Published On 2019-10-05 03:46 GMT   |   Update On 2019-10-05 03:46 GMT
ஒரு மனிதனின் உண்மையான முகம் அவனுடைய பண்புகள் தான். அந்த பண்புகளின் அன்பு, தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவை இருந்தால் அவன்தான் உண்மையில் அழகான இருதயம் உடையவன்.
“மனுஷன் முகத்தை பார்ப்பான்...1 சாமுவேல் 16:7”

சிலருடைய முகத்தோற்றம் மிகுந்த மலர்ச்சியாகவும், புன்னகை பூக்கள் பூத்துக்குலுங்குவது போலவும் தோன்றும். அவர்கள் யாரிடமும் எப்பொழுதும் எந்த ஒரு விஷயத்தையும், சிரித்து சிரித்து பேசுவார்கள். அதை பார்க்கும் போது அவர்கள் நம்முடைய இருதயத்தை ஈர்த்து விடுவார்கள். அவர்களின் முக பாவங்களை யாவும் அன்பையும், கபடற்ற பணிவையும், மிகுதியாக பிரகாசிக்க செய்யும். இருப்பினும் இவர்கள் யாவரும் அன்பில் மிகுந்தவர்களாகவும், கபடற்ற புறாக்களாகவும் இருப்பார்கள் என்று நம்பி விட்டால் ஏமாற்றங்கள் ஏராளமாக வரும். அவர்களின் இயற்கையான இந்த தோற்றத்துடன், இருதயத்தின் தன்மைக்கு தொடர்பே இல்லாமல் இருக்கும்.

அதே நேரத்தில் சிலரை பார்த்ததும் அவர்கள் கடும் கோபக்காரர்கள் போலவும், பெருமை மிக்கவர்கள் போலவும், இரக்கமற்ற இருதயக்காரர்கள் போலவும் தோன்றுவார்கள். அவர்களின் முகத்தில் தேடித்தேடிப்பார்க்க பார்த்தாலும், ஒரு புன்னகையோ, அன்பின் தோற்றங்களையோ பார்க்க முடியாது. ஆயினும் இவர்களின் சிலர் 24 மணி நேர புன்னகை ராஜாக்களை விடவும், சிரித்து சிரித்தே சிந்தை கவருகிறவர்களை விடவும் நல்லவர்களாகவும், அன்பு மிக்கவர்களாகவும், தாழ்மையாளர்களாகவும் இருப்பது உண்டு.

அகத்தோற்றம் முகத்தோற்றத்தில் பிரதிபலிக்கும் என்பது உண்மை. ஆனால் முகத்தோற்றத்தை அகத்தோற்றத்தின் அடையாளமாக எடுத்துக்கொள்ள இயலாது. மனிதனின் உண்மையான இருதய தோற்றத்தை முக பாவனைகளிலேயே பார்த்து உறுதிபடுத்தி விடக்கூடாது. அவனுடைய செயல்கள், குணங்கள், கொள்கைகள், நடத்தைகள், பண்புகள் போன்றவை தான் அவன் உண்மையில் எப்படி இருக்கிறான் என்பதை விளக்கும். எனவே தான் ஏசு கனிகளினால் மரம் எது என்பதை முடிவு செய்யும் ஆலோசனையை நமக்கு கொடுத்தார். ஒரு மனிதனின் உண்மையான முகம் அவனுடைய பண்புகள் தான். அந்த பண்புகளின் அன்பு, தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவை இருந்தால் அவன்தான் உண்மையில் அழகான இருதயம் உடையவன்.

பலர் பிறருடைய முகத்தோற்றங்களாலும், வசீகரமான வார்த்தைகளாலும், எளிதாக வஞ்சிக்கப்பட்டு விடுகின்றனர். ஏனென்றால், அவர்களின் இருதயம் நல்ல பண்புகளை விட நல்ல சுபாவங்களை வெளிப்புறத்தோற்றதையே மேன்மையாக எண்ணி விடுகிறது.

“அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாம், ஆனாலும்
முகத்தின் அழகை அகத்தின் அழகு என்று எண்ணாதே...”

குடந்தை தமிழினி, கும்பகோணம்
Tags:    

Similar News