ஆன்மிகம்
தோல்விகளை கையாள பழகுவோம்

தோல்விகளை கையாள பழகுவோம்

Published On 2019-09-28 04:22 GMT   |   Update On 2019-09-28 04:22 GMT
மனித வாழ்வில் தோல்விகள் என்பது இயல்பானவை, அவசியமானவை. இவற்றை சரிவர கையாளத் தெரிந்தவன் நிதானத்தோடு வாழ்வை எதிர்கொள்கின்ற மனிதனாய் மாற்றம் காண்கின்றான்.
தவறுக்கு தானே பொறுப்பேற்பதும் வெற்றிக்கு மற்றவர்களை பொறுப்பாக்குவதும் ஒரு உண்மையான தலைவனின் பண்பு நலன்களாகும். மனித வாழ்வில் தோல்விகள் என்பது இயல்பானவை, அவசியமானவை. இவற்றை சரிவர கையாளத் தெரிந்தவன் நிதானத்தோடு வாழ்வை எதிர்கொள்கின்ற மனிதனாய் மாற்றம் காண்கின்றான்.

வாழ்வில் வருகின்ற தோல்விகளை அனுபவமாக பார்த்து முன்னோக்கி பயணம் செய்ய வேண்டும். என் வாழ்வில் ஏன் சறுக்கல் என்றெண்ணி ஒரு போதும் சோர்ந்து விடக்கூடாது. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் வாழ்வில் ஏற்றபட்ட சறுக்கல்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். வாழ்வினில் வெற்றி பெற்ற எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு காலத்தில் தோல்வியை தழுவியவர்களே.

இன்று உரிமைக்கான போராட்டத்தில் பங்கேற்று முன்னணியில் நிற்கின்ற எல்லா மனிதர்களுமே, அவமானங்களால் அழகுபடுத்தப்பட்டவர்களே. எனவே இந்த நாளில் நம்மையே கேள்விக்கு உட்படுத்தி நாம் எழுச்சி பெற வேண்டிய வழிமுறைகளை அடையாளம் காண்போம். எல்லாவற்றையும் சரிசமமாய் அணுகுகின்ற பக்குவத்தினை நமக்குள் உள்வாங்கி முன்னோக்கி பயணிப்போம்.

தோல்வியினை முறையாக எதிர்கொண்டு வெற்றியின் நாயகர்களாய் நம்மையே செதுக்கி எடுப்போம்.

அருட்பணியாளர் குருசுகார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News