ஆன்மிகம்
வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா தொடங்கியது
வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை ஜோசப் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். இரவு 7 மணிக்கு கீழக்காட்டுவிளை அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.
சரல் அருட்பணியாளர் எவாஞ்சலின் எம்.பெஸ்கி மறையுரையாற்றினார். இரவு 9.30 மணிக்கு மறைமாவட்ட அன்பிய இயக்குனர் வலேரியன் தலைமையில் அன்பிய ஒருங்கிணைய ஆண்டுவிழா, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
28-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிருந்து திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
29-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி. மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு ஆண்டுவிழா நடக்கிறது.
சரல் அருட்பணியாளர் எவாஞ்சலின் எம்.பெஸ்கி மறையுரையாற்றினார். இரவு 9.30 மணிக்கு மறைமாவட்ட அன்பிய இயக்குனர் வலேரியன் தலைமையில் அன்பிய ஒருங்கிணைய ஆண்டுவிழா, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
28-ந் தேதி காலை 7 மணிக்கு திருவிருந்து திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை, ஆராதனை, நற்கருணை ஆசீர் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
29-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி. மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு ஆண்டுவிழா நடக்கிறது.