ஆன்மிகம்

தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி

Published On 2019-05-14 04:05 GMT   |   Update On 2019-05-14 04:05 GMT
விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில்ர திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அருட்தந்தையர்கள் பெர்க் மான்ஸ், ஜான் போஸ்கோ, தேவதாஸ், ஜோசப் பால் ஆகியோர் கொடியேற்றினர். இதனை தொடர்ந்து தினமும் திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி நடைபெற்று வந்தது.

நேற்று முன்தினம் இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் அருட்தந்தையர்கள் ஏ.பிச்சைமுத்து, பாஸ்கல் ராஜ், எஸ்.பிச்சமுத்து, ராயப்பன் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இரவு 7 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெற் றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடிய படி தேரை இழுத்துச்சென்றனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி, ஜங்ஷன் ரோடு வழியாக புதுக்குப்பம் வரை சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News