ஆன்மிகம்
பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் உள்ள கார்மல்நகர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 22-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளன்று மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். மறவன்குடியிருப்பு பங்குதந்தை மரியதாஸ் மறையுரையாற்றுகிறார்.
23-ந் தேதி காலை 9 மணிக்கு புதுநன்மை பெறுவோருக்கான தியானம் மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பள்ளவிளை பங்குதந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மேலராமன்புதூர் பங்குதந்தை ஆனந்த் மறையுரையாற்றுகிறார். 24-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஆன்டனி ஆரோக்கியம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. தளவாய்புரம் பங்குதந்தை ஜெயில்சிங் அருளுரையாற்றுகிறார். இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
25-ந் தேதி மாலை 6 மணிக்கு திணை இயக்குனர் வின்சென்ட் பி.வில்சன் தலைமையில் திருப்பலியும், பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஸ்டேன்லி சகாய சீலன் மறையுரையும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.
26-ந் தேதி மாலை 6 மணிக்கு குருசடி பங்குதந்தை பிரான்சிஸ் போர்ஜியோ தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. கண்டர்விளாகம் பங்குதந்தை ஜாண் குழந்தை மறைவுரையாற்றுகிறார். அதன்பிறகு நடக்கும் பொதுக்கூட்டத்தில் நடத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தினமும் திருப்பலி நடக்கிறது.
29-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
30-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலிக்கு ஆற்றுப்படுத்துதல் பணிகள் இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் தலைமை தாங்குகிறார். இரவு 10 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.
31-ந் தேதி காலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் திருக்குடும்ப விழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு தேர் பவனியும், மாலை 5.30 மணிக்கு திருக்கொடி இறக்கம், புகழ்மாலை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடக்கிறது. இரவு 11 மணிக்கு புத்தாண்டு பிறப்பு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
1-1-2018 அன்று ஊர் நிர்வாகம் சார்பில் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 2-ந்தேதி இளைஞர்கள் இயக்கம் சார்பில் இரவு 7 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பரிசுத்த திருக்குடும்ப ஆலய நிர்வாகக்குழு தலைவர் அந்தோணிமுத்து, செயலாளர் வாலன்டின் பிரிட்டோ, பொருளாளர் ராபி ரோசாரியோ, பங்குதந்தை பேட்ரிக்சேவியர், இணை பங்குதந்தை ஜோஸ் பெஸ்க் துரைசாமி மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.