ஆன்மிகம்

வடக்குகோணம் புனித அன்னாள் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-08-10 08:09 IST   |   Update On 2017-08-10 08:09:00 IST
நாகர்கோவில் வடக்கு கோணத்தில் உள்ள புனித அன்னாள் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் வடக்கு கோணத்தில் உள்ள புனித அன்னாள் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், அதைத்தொடர்ந்து கொடியேற்றமும், திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் மரிய சூசை வின்சென்ட் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆன்டனி பென்சிகர் மறையுரை ஆற்றுகிறார்.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் பிரான்சிஸ் போர்ஜியா தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆனந்த் மறையுரை ஆற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு ஆண்டுவிழா பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 13-ந்தேதி காலை 7 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் வலேரியன் தலைமை தாங்க, அருட்பணியாளர் அருள்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நற்கருணை ஆராதனையும், 5.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது. தினமும் மாலை ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

15-ந்தேதி காலை 7 மணிக்கு அன்னை மரியாளின் விண்ணேற்பு, சுதந்திர தின திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் ஜான்பீட்டர் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜெரி மறையுரை ஆற்றுகிறார். 16-ந்தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார்.

19-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் தலைமை தாங்க, அருட்பணியாளர் சாம் பெலிக்ஸ் ஆன்டனி மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, ஆராதனை நற்கருணை ஆசிர் நடக்கிறது. அருட்பணியாளர் ஜான்குழந்தை தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டான்லி சகாயம் மறையுரை ஆற்றுகிறார்.

இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 20-ந்தேதி காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. மறை மாவட்ட முதன்மை செயலாளர் பெலிக்ஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் அமிர்தராஜ் மறையுரை ஆற்றுகிறார். பகல் 2 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசிர், கொடியிறக்கமும், இரவு 7 மணிக்கு ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

Similar News