ஆன்மிகம்
தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய தேர்பவனி
தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடைபெற்றது. 8-ம் திருவிழா அன்று மாலையில் வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில், நற்கருணை பவனி, மறையுரை நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
இரவு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மறையுரை வழங்கினார். தொடர்ந்து மும்பை களிகை சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வன் தலைமையில், சாகச நிகழ்ச்சி நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி பவனி வந்து காட்சி அளித்தார்.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 10-ம் திருவிழாவான நேற்று கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடைபெற்றது. 8-ம் திருவிழா அன்று மாலையில் வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில், நற்கருணை பவனி, மறையுரை நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
இரவு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மறையுரை வழங்கினார். தொடர்ந்து மும்பை களிகை சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வன் தலைமையில், சாகச நிகழ்ச்சி நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி பவனி வந்து காட்சி அளித்தார்.
இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 10-ம் திருவிழாவான நேற்று கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.