ஆன்மிகம்
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய தேர் பவனி 4-ந்தேதி நடக்கிறது
நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா தேர்ப்பவனி வருகிற 4-ந்தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். 132-வது ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடைபெற்றது.
மாலையில் நற்கருணை ஆசீருடன் கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடக்கிறது.
8-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலையில் வடக்கன்குளம் மறை வட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில் நற்கருணை பவனியும், மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மறையுரை வழங்குகிறார்.
இரவு மும்பை களிகை சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வன் தலைமையில் சாகச நிகழ்ச்சியும், மேஜிக் ஷோ நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேர் பவனியும், தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடக்கிறது. 5-ந்தேதி கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜாண்சன்ராஜ் உதவி பங்கு தந்தை கிங்ஸ்டன், தர்மகர்த்தா ஆனந்தராஜா மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.
மாலையில் நற்கருணை ஆசீருடன் கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடக்கிறது.
8-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலையில் வடக்கன்குளம் மறை வட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில் நற்கருணை பவனியும், மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மறையுரை வழங்குகிறார்.
இரவு மும்பை களிகை சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வன் தலைமையில் சாகச நிகழ்ச்சியும், மேஜிக் ஷோ நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேர் பவனியும், தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடக்கிறது. 5-ந்தேதி கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜாண்சன்ராஜ் உதவி பங்கு தந்தை கிங்ஸ்டன், தர்மகர்த்தா ஆனந்தராஜா மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.