ஆன்மிகம்
மனமாற்றம் நிறைவான மகிழ்ச்சியை தரும்
ஜெபமும், நற்செயல்களும் இணைந்தால் நமது மனித வாழ்வு சிறக்கும். “ஜெபியுங்கள் நீங்கள் கடவுளிடம் செல்வீர்கள். நற்செயல் செய்யுங்கள். கடவுள் உங்களை தேடி வருவார்“ என்றார் அன்னை தெரசா.
தவக்காலம் என்பது அருளின் காலம். இறை ஆற்றலின் காலம். ஒருவர், தான் செய்த தவறை உணர்ந்து தன்னை திருத்திக்கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட மன்னிப்பின் காலம். இவற்றிற்கெல்லாம் மேலாக இறை-மனித உறவை மேம்படுத்தும் காலம்.
இத்தகைய சிறப்பு பெற்ற தவக்காலத்தின் மைய பொருளாக அமைவது மனமாற்றம். இந்த சொல், தீமையிலிருந்து விலகி நல்லவராம் கடவுளை நோக்கி திரும்புவதையும், ஒருவனின் நடத்தையிலும் முழு மனிதனில் உண்டாகும் மனமாற்றத்தை குறிக்கின்றது. இயேசுவின் பொதுப்பணி தொடக்கமே மனமாற்றத்தின் அழைப்பும், கடவுளின் அரசின் வருகையை பற்றியதாக தான் இருக்கின்றது. (மாற்கு 1,15)
அந்த மனமாற்றத்தை செயலில் காட்டிய விவிலிய மனிதர்களில் சக்கேயு என்பவரும் ஒருவர். அவரிடம் பதவி, புகழ், பணம், அரசியல், செல்வாக்கு அனைத்தும் இருந்தன. ஆனால் அவருக்குள் மகிழ்ச்சி இல்லை. உறவு என்று சொல்ல ஒருவரும் இல்லை. உள்ளத்தில் எப்போதும் ஒரு விரக்தியை உணர்ந்தார். ஆனால் இவரின் மனமாற்றமே இயேசுவை இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என அறிவிக்க செய்தது.
மனம் மாறுகிறவர்களுக்கு மன்னிப்பும், மீட்பும் உண்டு என்பதையும், நிறைவான மனமாற்றம் நிலையான மகிழ்ச்சியை தருகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் மனமாற்றம் என்பது செயலில் வெளிப்பட வேண்டும். “ஜெபியுங்கள் நீங்கள் கடவுளிடம் செல்வீர்கள். நற்செயல் செய்யுங்கள். கடவுள் உங்களை தேடி வருவார்“ என்றார் அன்னை தெரசா.
ஜெபமும், நற்செயல்களும் இணைந்தால் நமது மனித வாழ்வு சிறக்கும். கடவுளின் இரக்கம் சிறப்பாக நம்மை தேடி வரும். தவக்காலத்தில் நமது வாழ்வை ஜெபத்தினாலும், நற்செயல்களினாலும் நிரப்புவோம். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன் (யோவான் 15:11). எனவே தவக்காலத்தில் மனமாற்றம் பெற்று, பிறருக்கு செய்யும் நற்செயல்களால் இறை ஆசீர்பெறுவோம்.
அருட்திரு ஆல்பர்ட் ஜோசப், பங்குத்தந்தை, குட்டத்து ஆவாரம்பட்டி.
இத்தகைய சிறப்பு பெற்ற தவக்காலத்தின் மைய பொருளாக அமைவது மனமாற்றம். இந்த சொல், தீமையிலிருந்து விலகி நல்லவராம் கடவுளை நோக்கி திரும்புவதையும், ஒருவனின் நடத்தையிலும் முழு மனிதனில் உண்டாகும் மனமாற்றத்தை குறிக்கின்றது. இயேசுவின் பொதுப்பணி தொடக்கமே மனமாற்றத்தின் அழைப்பும், கடவுளின் அரசின் வருகையை பற்றியதாக தான் இருக்கின்றது. (மாற்கு 1,15)
அந்த மனமாற்றத்தை செயலில் காட்டிய விவிலிய மனிதர்களில் சக்கேயு என்பவரும் ஒருவர். அவரிடம் பதவி, புகழ், பணம், அரசியல், செல்வாக்கு அனைத்தும் இருந்தன. ஆனால் அவருக்குள் மகிழ்ச்சி இல்லை. உறவு என்று சொல்ல ஒருவரும் இல்லை. உள்ளத்தில் எப்போதும் ஒரு விரக்தியை உணர்ந்தார். ஆனால் இவரின் மனமாற்றமே இயேசுவை இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என அறிவிக்க செய்தது.
மனம் மாறுகிறவர்களுக்கு மன்னிப்பும், மீட்பும் உண்டு என்பதையும், நிறைவான மனமாற்றம் நிலையான மகிழ்ச்சியை தருகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் மனமாற்றம் என்பது செயலில் வெளிப்பட வேண்டும். “ஜெபியுங்கள் நீங்கள் கடவுளிடம் செல்வீர்கள். நற்செயல் செய்யுங்கள். கடவுள் உங்களை தேடி வருவார்“ என்றார் அன்னை தெரசா.
ஜெபமும், நற்செயல்களும் இணைந்தால் நமது மனித வாழ்வு சிறக்கும். கடவுளின் இரக்கம் சிறப்பாக நம்மை தேடி வரும். தவக்காலத்தில் நமது வாழ்வை ஜெபத்தினாலும், நற்செயல்களினாலும் நிரப்புவோம். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன் (யோவான் 15:11). எனவே தவக்காலத்தில் மனமாற்றம் பெற்று, பிறருக்கு செய்யும் நற்செயல்களால் இறை ஆசீர்பெறுவோம்.
அருட்திரு ஆல்பர்ட் ஜோசப், பங்குத்தந்தை, குட்டத்து ஆவாரம்பட்டி.