ஆன்மிகம்
பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை தொடங்குகிறது
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி மாலையில் பூண்டி மாதா திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி மற்றும் பூண்டி மாதாவின் சிறிய சொரூபம் வைக்கப்பட்ட சப்பரம் ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வருவர்.
இதை தொடர்ந்து சென்னை மயிலை உயர் மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். பின்னர் பேராலயத்தில் மரியா-நம்பிக்கை மிகுந்தவர் என்ற தலைப்பில் திருப்பலியை நிறைவேற்றுகிறார். விழா நடைபெறும் நவ நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.
பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான வருகிற 14-ந் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தின் பங்குத்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த அருட்தந்தையர்கள் லூர்துசேவியர், ராயப்பர் ஆகியோரது நினைவு திருப்பலி நடைபெறுகிறது. மாலையில் மரியா-நம்பினோர்க்கு அடைக்கலம் என்ற தலைப்பில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
இரவு வண்ண மின்விளக்கு அலங்காரம், மலர் அலங்காரத்தில் பூண்டி மாதாவின் தேர் பவனி நடக்கிறது. பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை காண உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக பேராலய நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதை தொடர்ந்து சென்னை மயிலை உயர் மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். பின்னர் பேராலயத்தில் மரியா-நம்பிக்கை மிகுந்தவர் என்ற தலைப்பில் திருப்பலியை நிறைவேற்றுகிறார். விழா நடைபெறும் நவ நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.
பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான வருகிற 14-ந் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தின் பங்குத்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த அருட்தந்தையர்கள் லூர்துசேவியர், ராயப்பர் ஆகியோரது நினைவு திருப்பலி நடைபெறுகிறது. மாலையில் மரியா-நம்பினோர்க்கு அடைக்கலம் என்ற தலைப்பில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
இரவு வண்ண மின்விளக்கு அலங்காரம், மலர் அலங்காரத்தில் பூண்டி மாதாவின் தேர் பவனி நடக்கிறது. பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை காண உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக பேராலய நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.