ஆன்மிகம்
பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா நிறைவடைந்தது
பாந்திரா மலை மாதா ஆலய திருவிழா 11-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
மும்பை பாந்திராவில் நூறு ஆண்டுகள் பழமையான மலை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா 11-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நேற்று திருவிழாவின் நிறைவு நாள் என்பதால் மும்பை மட்டும் இன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் மலை மாதா ஆலயத்தில் திரண்டனர்.
காலை 11.30 மணியளவில் திருவிழா நிறைவு நாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் திரளான தமிழ் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவின் ஆசியை பெற்று சென்றனர். பொது மக்களின் வசதிக்காக பாந்திரா ரெயில்நிலையத்தில் இருந்து ஆலயம் அமைந்துள்ள ஹில்ரோடு பகுதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அடுத்த ஆண்டு திருவிழா செப்டம்பர் 10-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது.