ஆன்மிகம்

கிறிஸ்து கற்பித்த செபம்

Published On 2016-09-17 11:28 IST   |   Update On 2016-09-17 11:28:00 IST
எல்லா கிறிஸ்த்தவரும் இச்செபத்தை உச்சரிக்கின்ற போதும், கத்தோலிக்கர் அதிகமாக பாவித்து வருகின்றனர்.
கிறிஸ்து கற்பித்த செபம்(பரலோக மந்திரம்) இயேசுவின் சீடர் எப்படி செபிப்பது என கேட்டபோது இயேசு சொல்லிக்கொடுத்த செபமாகும். விவிலியத்தில் மத்தேயு 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா கிறிஸ்த்தவரும் இச்செபத்தை உச்சரிக்கின்ற போதும், கத்தோலிக்கர் அதிகமாக பாவித்து வருகின்றனர். இச்செபத்தின் வசன நடை இடத்துகிடம் வேறுபட்டாலும் பொருள் மாற்றமில்லை. கைகளை விரித்து வான்நோக்கி உயர்த்தியபடியோ, குழுவாக உச்சரிக்கும் போது அருகிலுள்ளவரின் கையை பிடித்து ஒருமனித சங்கிலி அமைத்தவாறோ சொல்வது வழக்கமாகும். அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டவை மூல விவிலியத்தில் காணப்படாவில்லை, பின்னர் இணைக்கப்பட்டுள்ளது.
 

விண்ணிருக்கும் எம் தந்தாய்!
ஒளிரட்டும் நின் திருப்பெயரே! 
வருகவே உம் ஆட்சியே!
விண்ணைப்போல மண்ணிலே! 
அளிப்பீரே எமக்கு உணவு இன்று!
மன்னிப்பீரே எம் குற்றம்தனை! 
யாமும் பிறரை மன்னித்தவாறே!
தூண்டற்கவே எம்மை தீவழியிலே! 
கடையேற்றுகவே எம்மை
தீயனிடமிருந்து நீர்.
 
("ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.")

Similar News