ஆன்மிகம்
அரியாங்குப்பத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி
அரியாங்குப்பத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.
புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஆலயத்தில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5-30 மணிக்கு திருப்பலி மற்றும் சிறிய தேர்பவனி ஆகியவை நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி மற்றும் 6-15 மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நடந்தன. தொடர்ந்து காலை 8 மணிக்கு புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது.
மாலையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆரோக்கிய அன்னையை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி மற்றும் 6-15 மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நடந்தன. தொடர்ந்து காலை 8 மணிக்கு புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது.
மாலையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆரோக்கிய அன்னையை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை தாமஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.