ஆன்மிகம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாநாட்களில் தினமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல சிலுவை பாதைவழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் முகப்பிலிருந்து தேர் புறப்பட்டு சென்றது.
தேர்புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஆவேமரியா வாழ்க” என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியர், அமலோற்பவமாதா, புனித உத்திரியமாதா ஆகியோரின் தேர்கள் வண்ண மின்விளக்கு அலங்காரத்துடன் அணிவகுத்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர்பவனி நடந்தது. தேர் மீது பக்தர்கள் பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கியமாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுதிருப்பலி நிறைவேற்றப்பட்டது. தேர்பவனியில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, போலீஸ் சூப்பிரண்டு துரை, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்குதந்தைகள் ஜோதி நல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். மேலும், வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் கூடியிருந்த பக்தர்களும் காணும் வகையில் தேர்பவனி நிகழ்ச்சியானது அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது.
தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
அதேபோல இந்த ஆண்டு திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாநாட்களில் தினமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல சிலுவை பாதைவழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் முகப்பிலிருந்து தேர் புறப்பட்டு சென்றது.
தேர்புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஆவேமரியா வாழ்க” என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியர், அமலோற்பவமாதா, புனித உத்திரியமாதா ஆகியோரின் தேர்கள் வண்ண மின்விளக்கு அலங்காரத்துடன் அணிவகுத்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர்பவனி நடந்தது. தேர் மீது பக்தர்கள் பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கியமாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.
இந்தநிகழ்ச்சியில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுதிருப்பலி நிறைவேற்றப்பட்டது. தேர்பவனியில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, போலீஸ் சூப்பிரண்டு துரை, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்குதந்தைகள் ஜோதி நல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். மேலும், வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் கூடியிருந்த பக்தர்களும் காணும் வகையில் தேர்பவனி நிகழ்ச்சியானது அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது.
தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.