ஆன்மிகம்

புனித ஜெயராக்கினி மாதா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-08-10 09:58 IST   |   Update On 2016-08-10 09:58:00 IST
திருச்சிமாவட்டம் தொட்டியம் தூய ஜெயராக்கினி மாதா ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
திருச்சிமாவட்டம் தொட்டியம் தூய ஜெயராக்கினி மாதா ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக பங்குதந்தைகள் சென்னை போஸ்கோ, பாடாலூர் ஜோசப்ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறிய தேர்பவனி மற்றும் திருப்பலிகளை நடத்தினர். தொடர்ந்து திருவிழாவில் வருகிற 13-ந்தேதி வரை நவநாள் கொண்டாட்டமாக தினமும் திருப்பலியும், சொற்பொழிவும் சிறிய தேர் பவனியும் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு திருப்பலி மற்றும் ஆடம்பர தேர்பவனி வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை எல்.குழந்தைசாமி, உதவி பங்கு தந்தை எஸ். ஸ்டீபன்ஜோசப் மற்றும் ஆலய பங்குமக்கள், அருட் சகோதரிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Similar News