ஆன்மிகம்

அருளானந்தபுரத்தில் தூய அன்னாள் ஆலய பெருவிழாவில் தேர்பவனி

Published On 2016-08-04 10:14 IST   |   Update On 2016-08-04 10:14:00 IST
மானாமதுரை அருகே அருளானந்தபுரத்தில் தூய அன்னாள் பெரு விழாவில் தேர்பவனி நடந்தது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் பங்கு தளத்தில் உள்ள அருளா னந்தபுரம் தூய அன்னாள் ஆலய 151-வது ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவ நாள் பூஜை, திருப்பலி நடந்தது.

அதைத்தொடர்ந்து திருவிழா தேர்பவனி நற்கருணை பெருவிழா, புனித அன்னாளின் சம அன்னதானம் நிகழ்ச்சிகள் நடந்தன.

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி துணை முதல்வர் ஜோசப்ஜான் கென்னடி சிறப்பு திருப்பலிபூஜையை நடத்தினார். விழா ஏற்பாடுகளை இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ் மற்றும் அருளானந்தபுரம் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Similar News