ஆன்மிகம்

தூய ஜான்மரி வியான்னி ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-08-01 08:14 IST   |   Update On 2016-08-01 08:14:00 IST
புதுச்சேரி ரெயின்போ நகர் தூய ஜான்மரி வியான்னி ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள தூய ஜான்மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மறைவட்ட முதன்மைகுரு பங்குதந்தை ஆரோக்கியதாஸ் கலந்துகொண்டு கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக காலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தூய ஜான்மரி வியான்னி ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி வருகிற 7-ந் தேதி காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆடம்பர தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் புதுவை-கடலூர் உயர் மறை மாநில பேராயர் ஆனந்தராயர் கலந்துகொள்கிறார். விழாவையொட்டி நாள்தோறும் இருவேளையில் சிறப்பு திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடக்கிறது.

Similar News