ஆன்மிகம்
செல்வரான இளைஞருக்கு இயேசு கூறிய அறிவுரை
யாரெல்லாம் கடவுளுக்காக உங்கள் வீடுகள், உறவினர்கள், பெற்றோர், சொத்துகள் எல்லாவற்றையும் விட்டு விட்டீர்களோ, அவர்கள் நூறு மடங்கு பெறுவர். அது மட்டுமல்ல, அவர்களுக்கு நிலை வாழ்வும் நிச்சயம் உண்டு’.
இயேசு எப்போதுமே ஏழை எளியவர்களுடனும், பாவிகளுடனும் கலந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பாவத்தை வெறுத்த அவர், பாவிகளை நேசித்தார். அவர் ஏழைகளையும், பாவிகளையும் அரவணைத்துக் கொண்டது பலருக்கும் பிடிக்கவில்லை.
அந்த சூழலில் ஒரு இளைஞன் இயேசுவிடம் வந்தார். அவர் மிகப்பெரிய பணக்காரர்.
‘போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?’ வந்தவர் கேட்டார்.
அவருடைய கேள்வியின் தொனியில் இயேசு என்ன பதில் சொல்கிறார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாய் இருந்தது. உண்மையிலேயே விண்ணக வாழ்வுக்குள் நுழைய விரும்பியவராய் தெரியவில்லை.
‘நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நீர் நல்லவராக வாழ விரும்பினால் கட்டளைகளைக் கடைபிடியும்’ இயேசு பதில் சொன்னார்.
‘எந்தக் கட்டளைகளைச் சொல்கிறீர்கள்?’
‘பத்துக் கட்டளைகளைப் பற்றி அறிந்திருக்கிறாயா? கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட’ இயேசு சொன்னார்
‘இவைகள் எல்லாவற்றையும் கடைபிடிக்கிறேன், எதிலும் தவறியதில்லை’.
‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய்’ என்னும் கட்டளையையும் கடைப்பிடி. விண்ணகத்தில் நீ நுழையலாம்’ இயேசு சொன்னார்.
‘அதையும் நான் கடைப்பிடிக்கிறேன் இயேசுவே....’ அவன் சொன்னான்.
உண்மையில் அவன் அதைக் கடைப்பிடிக்கவில்லை. தன்னைப் போல அயலானையும் நேசிப்பவன் செல்வந்தனாய் இருக்க முடியாது. ஏழைகள் உண்ண உணவில்லாமலும், வறுமை நிலையிலும் இருக்கும் போது செல்வத்தை களஞ்சியத்தில் சேர்த்துக் கொண்டே இருப்பவர் எப்படி ‘தன்னைப் போல் அயலானை நேசிப்பவர்’ ஆக முடியும்?
இயேசு அவரைக் குற்றம் சாட்டி இகழ்ச்சிக்குள்ளாக்க விரும்பவில்லை.
அவரைப் பார்த்து சொன்னார்: ‘நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்’ என்றார்.
அந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.
தன்னிடமிருக்கும் பணத்தில் கொஞ்சத்தைக் காணிக்கையாய்க் கொடுத்தோ, தான தர்மங்கள் செய்தோ விண்ணக வாழ்க்கையை வாங்கி விடலாம் என அவர் நினைத்தார். உண்மையில் விண்ணக வாழ்க்கை என்பது நாம் சம்பாதிப்பதல்ல, நமக்கு இறைவனால் இலவசமாய்க் கொடுக்கப்படுவதே. அதை அவன் அறியவில்லை.
இயேசுவின் பதில் அந்த இளைஞனை நிலைகுலைய வைத்தது. இத்தனை நாள் சேமித்த சொத்தை எப்படி ஒட்டு மொத்தமாக விற்று மற்றவர்களுக்குக் கொடுப்பது? வாழும் வரை அனைத்து சொத்துகளோடும் சுகபோக வாழ்க்கை வாழவேண்டும் என நினைத்தார் அவர். எனவே அவர் மன வருத்தத்தோடு திரும்பிச் சென்றார்.
இயேசு சீடர்களிடம் திரும்பி, ‘செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’ என்றார்.
அந்தப் பதில் சீடர்களுக்கே வியப்பாக இருந்தது. செல்வம் படைத்தவர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்பது அவர்களுக்குப் புதிய பாடம். அதிக பணம் இருப்பவர்கள் காணிக்கைகளை அதிகமாய் செலுத்துவதும், அதன் மூலம் தாங்கள் கடவுளின் பிரியத்துக்குரியவர்கள் என காட்டிக் கொள்வதுமே அந்த நாட்களில் நடந்து வந்தது. எனவே அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்.
‘அப்படிப் பார்த்தால் யார் தான் மீட்புப் பெற முடியும்?’
‘மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்’ இயேசு சொன்னார்.
சீடர்களுக்குள் குழப்பம் எழுந்தது. வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில் தங்கள் சொத்தையெல்லாம் விற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மனிதன் விண்ணகம் நுழைய முடியும் என்றால், துவக்கம் முதலே எல்லாவற்றையும் உதறிவிட்டு இயேசுவோடு நடக்கும் தங்களுக்கு என்ன கிடைக்கும்?
சீடர்கள் சிந்திக்க, யோவான் இயேசுவிடம் கேட்டார், ‘நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?’
இயேசு சீடர்களைப் பார்த்து, ‘அதற்குரிய காலம் வரும். நான் அரியணையில் வீற்றிருக்கும் போது நீங்கள் பன்னிரண்டு பேரும் இஸ்ரவேல் மக்களின் பன்னிரு குலத்துக்கும் நடுவர்களாக பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள்’ இயேசு உறுதியாய்ச் சொல்ல அவர்கள் முகத்தில் நிம்மதி.
இயேசு தொடர்ந்தார், ‘எனக்காக யாரெல்லாம் உங்கள் வீடுகள், உறவினர்கள், பெற்றோர், சொத்துகள் எல்லாவற்றையும் விட்டு விட்டீர்களோ, அவர்கள் நூறு மடங்கு பெறுவர். அது மட்டுமல்ல, அவர்களுக்கு நிலை வாழ்வும் நிச்சயம் உண்டு’.
இயேசுவின் பேச்சைக் கேட்ட சீடர்கள் மகிழ்ந்தனர்.
அந்த சூழலில் ஒரு இளைஞன் இயேசுவிடம் வந்தார். அவர் மிகப்பெரிய பணக்காரர்.
‘போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?’ வந்தவர் கேட்டார்.
அவருடைய கேள்வியின் தொனியில் இயேசு என்ன பதில் சொல்கிறார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாய் இருந்தது. உண்மையிலேயே விண்ணக வாழ்வுக்குள் நுழைய விரும்பியவராய் தெரியவில்லை.
‘நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நீர் நல்லவராக வாழ விரும்பினால் கட்டளைகளைக் கடைபிடியும்’ இயேசு பதில் சொன்னார்.
‘எந்தக் கட்டளைகளைச் சொல்கிறீர்கள்?’
‘பத்துக் கட்டளைகளைப் பற்றி அறிந்திருக்கிறாயா? கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட’ இயேசு சொன்னார்
‘இவைகள் எல்லாவற்றையும் கடைபிடிக்கிறேன், எதிலும் தவறியதில்லை’.
‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய்’ என்னும் கட்டளையையும் கடைப்பிடி. விண்ணகத்தில் நீ நுழையலாம்’ இயேசு சொன்னார்.
‘அதையும் நான் கடைப்பிடிக்கிறேன் இயேசுவே....’ அவன் சொன்னான்.
உண்மையில் அவன் அதைக் கடைப்பிடிக்கவில்லை. தன்னைப் போல அயலானையும் நேசிப்பவன் செல்வந்தனாய் இருக்க முடியாது. ஏழைகள் உண்ண உணவில்லாமலும், வறுமை நிலையிலும் இருக்கும் போது செல்வத்தை களஞ்சியத்தில் சேர்த்துக் கொண்டே இருப்பவர் எப்படி ‘தன்னைப் போல் அயலானை நேசிப்பவர்’ ஆக முடியும்?
இயேசு அவரைக் குற்றம் சாட்டி இகழ்ச்சிக்குள்ளாக்க விரும்பவில்லை.
அவரைப் பார்த்து சொன்னார்: ‘நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்’ என்றார்.
அந்த பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.
தன்னிடமிருக்கும் பணத்தில் கொஞ்சத்தைக் காணிக்கையாய்க் கொடுத்தோ, தான தர்மங்கள் செய்தோ விண்ணக வாழ்க்கையை வாங்கி விடலாம் என அவர் நினைத்தார். உண்மையில் விண்ணக வாழ்க்கை என்பது நாம் சம்பாதிப்பதல்ல, நமக்கு இறைவனால் இலவசமாய்க் கொடுக்கப்படுவதே. அதை அவன் அறியவில்லை.
இயேசுவின் பதில் அந்த இளைஞனை நிலைகுலைய வைத்தது. இத்தனை நாள் சேமித்த சொத்தை எப்படி ஒட்டு மொத்தமாக விற்று மற்றவர்களுக்குக் கொடுப்பது? வாழும் வரை அனைத்து சொத்துகளோடும் சுகபோக வாழ்க்கை வாழவேண்டும் என நினைத்தார் அவர். எனவே அவர் மன வருத்தத்தோடு திரும்பிச் சென்றார்.
இயேசு சீடர்களிடம் திரும்பி, ‘செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’ என்றார்.
அந்தப் பதில் சீடர்களுக்கே வியப்பாக இருந்தது. செல்வம் படைத்தவர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்பது அவர்களுக்குப் புதிய பாடம். அதிக பணம் இருப்பவர்கள் காணிக்கைகளை அதிகமாய் செலுத்துவதும், அதன் மூலம் தாங்கள் கடவுளின் பிரியத்துக்குரியவர்கள் என காட்டிக் கொள்வதுமே அந்த நாட்களில் நடந்து வந்தது. எனவே அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்.
‘அப்படிப் பார்த்தால் யார் தான் மீட்புப் பெற முடியும்?’
‘மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்’ இயேசு சொன்னார்.
சீடர்களுக்குள் குழப்பம் எழுந்தது. வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில் தங்கள் சொத்தையெல்லாம் விற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மனிதன் விண்ணகம் நுழைய முடியும் என்றால், துவக்கம் முதலே எல்லாவற்றையும் உதறிவிட்டு இயேசுவோடு நடக்கும் தங்களுக்கு என்ன கிடைக்கும்?
சீடர்கள் சிந்திக்க, யோவான் இயேசுவிடம் கேட்டார், ‘நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?’
இயேசு சீடர்களைப் பார்த்து, ‘அதற்குரிய காலம் வரும். நான் அரியணையில் வீற்றிருக்கும் போது நீங்கள் பன்னிரண்டு பேரும் இஸ்ரவேல் மக்களின் பன்னிரு குலத்துக்கும் நடுவர்களாக பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள்’ இயேசு உறுதியாய்ச் சொல்ல அவர்கள் முகத்தில் நிம்மதி.
இயேசு தொடர்ந்தார், ‘எனக்காக யாரெல்லாம் உங்கள் வீடுகள், உறவினர்கள், பெற்றோர், சொத்துகள் எல்லாவற்றையும் விட்டு விட்டீர்களோ, அவர்கள் நூறு மடங்கு பெறுவர். அது மட்டுமல்ல, அவர்களுக்கு நிலை வாழ்வும் நிச்சயம் உண்டு’.
இயேசுவின் பேச்சைக் கேட்ட சீடர்கள் மகிழ்ந்தனர்.