ஆன்மிகம்

புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-07-20 07:39 IST   |   Update On 2016-07-20 07:39:00 IST
புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் புனித புதுமை அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம், பாதிரியார்கள் மெல்கிசதேக், குழந்தைசாமி, மார்ட்டீன் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றினார்கள்.

முன்னதாக கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நவநாட்களில் தினமும் காலை, மாலை வேளையில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

வருகிற 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தேர்பவனியும், அதைத்தொடர்ந்து தேவநற் கருணை ஆசீர்வாதமும் நடைபெறும்.

Similar News