ஆன்மிகம்

புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

Published On 2016-07-06 08:05 IST   |   Update On 2016-07-06 08:05:00 IST
அந்தோணியார் ஆலய தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்கால் காமராஜர் சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கார தேர் பவனி நடைபெற்றது.

இதையொட்டி காரைக்கால் மாவட்ட பங்கு தந்தை ஆண்டணி லூர்து அடிகளார் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதனை தொடர்ந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து தேர்பவனி தொடங்கியது.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

Similar News