ஆன்மிகம்

கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி

Published On 2016-06-20 10:03 IST   |   Update On 2016-06-20 10:03:00 IST
கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி நேற்று இரவு நடந்தது.
கோவை புலியகுளத்தில் உள்ள அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவு நடந்தது.

இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்குகுருக்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இரவில் தேர்பவனி நடந்தது. இதற்காக அந்தோணியார், சூசையப்பர், அன்னை தெரசா, மிக்கேல் அதிதூதர், சகாயமாதா, செபஸ்டியான், குழந்தை ஏசு உள்பட 15 தேர்கள் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஆலயம் முன்பு இருந்து தொடங்கிய தேர்பவனியை ஆலய பங்குகுரு ஜார்ஜ் தனசேகர் தொடங்கி வைத்தார்.

மேட்டுக்காடு, ரெட்பீல்டு, ராமநாதபுரம் போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் ஆலயத்துக்கு சென்று தேர்பவனி முடிந்தது. இந்த தேர்பவனியில் அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News