ஆன்மிகம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2016-06-04 08:59 IST   |   Update On 2016-06-04 08:59:00 IST
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 6.30 மணிக்கு பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் கொடியேற்றுகிறார். அதை தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை இரவில் கலை நிகழ்ச்சிகள் வெவ்வேறு குழுவினர் சார்பில் நடைபெறுகிறது.

11-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ரதவீதிகள் வழியாக நற்கருணை பவனி நடக்கிறது. 12-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை, இரவு 9.30 மணிக்கு தேர்பவனி ஆகியவை நடைபெறுகிறது. 13-ந்தேதி காலை 5 மணிக்கு தேரில் வைத்து திருவிழா கூட்டு திருப்பலி, பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7.30 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலையில் வணக்க நாள் திருப்பலியும், மாலையில் ஜெபமாலையும், மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. வணக்கநாள் திருப்பலியை பள்ளிகள், பக்த சபையினர், பீடச்சிறுவர்கள், பாடகர் குழுவினர் ஆகியோர் சிறப்பிக்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ், உதவி பங்குத்தந்தை சூசைமணி, பங்குப்பேரவை துணைத்தலைவர் வின்சென்ட், செயலாளர் ஜோசப் பிளாரன்ஸ், இணைச்செயலாளர் மரிய செல்வம், பொருளாளர் டேவிட் ஜெயராஜ், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.

Similar News