ஆன்மிகம்
‘அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை’ (யோவா.1:4,5).
‘அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை’ (யோவா.1:4,5).
அனைத்தும் தேவனுடைய வார்த்தை மூலமாக உண்டாயிற்று. உயிருள்ள அனைத்தும் அவரால் உருவாக்கப்பட்டு உயிர் பெற்றன. கர்த்தருக்குள் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவனில் இருந்து மனிதனுக்கு ஒளி தோன்றிற்று. கர்த்தரின் ஒளியானது இருளிலே பிரகாசித்தது. எந்த இருளும் அந்த ஒளியை மறைக்க முடியவில்லை.
இயேசு சொன்னார், ‘நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைவான்’ என்றார்.
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியை காணமாட்டான். அவன் இருளிலே இருக்கிறான். இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியமாட்டான். துன்மார்க்கனின் ஒளி அவர்களை விட்டு எடுபட்டு போகும்.
சத்தியத்தின்படி ஜீவிக்கிறவன் ஒளியினிடத்திற்கு வருகிறான். ஒளி உங்களோடு இருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகள். எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. ஞானவான்களை ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போல் வைக்கின்றார். அப்பொழுது உன் ஒளி வந்தது. கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. ஒரு மனிதனின் கண்களின் ஒளி அவன் இருதயத்தைப் பூரிப்பாக்கும்.
‘தேவரீர் எங்களுக்கு இரங்கி எங்களை ஆசீர்வதித்து உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப் பண்ணும்’ (சங்.67:2).
யூதேயா தேசத்திலும், எருசலேம் பட்டணத்திலும், கலிலேய தேசத்திலும் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்த போது எல்லாருக்கும் அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கின படியினாலே, மக்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகை தேடினார்கள். அதைபோல் நமது சரீரம் முழுவதும் பெலவீனம் அடைந்து மூழ்கி போகின்ற நேரத்தில் ஒளியை வஸ்திரமாகத் தரித்து இருக்கிறவர், சுத்த ஒளியான கர்த்தர் நமது உடல் முழுவதும் பெலவீன பகுதிகளில் அவரது ஒளியால் சுகம், பெலன் ஆரோக்கியத்தை கட்டளை இடுகிறார்.
கர்த்தருடைய முகத்தின் ஒளியை நம்மேல் பிரகாசிக்கப் பண்ணுகிறார். அப்பொழுது சரீரத்தில் உள்ள வியாதி என்ற இருளின் அதிகாரங்கள் மாறி ஒளியின் கிருபையை தரித்துக் கொள்கின்றோம்.
‘நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்’. (யோவா.9:5)
சவுல் என்பவன் கர்த்தருடைய சீடரை கொலை செய்யும்படி தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் இயேசு தரிசனமானார். உடனே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது ஒளியிலிருந்து ஒரு சத்தம் உண்டாகி ‘சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?’ என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தை கேட்டான். அதற்கு அவன், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்றான். அதற்கு கர்த்தர், ‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்’ என்றார்.
ஒளியா இருக்கிற கர்த்தர் அனனியா என்ற தேவ மனிதனை அனுப்பி அவன் பார்வை பெற்றான். சவுல் என்ற மனிதன் பெயர் பவுல் ஆக மாற்றப்பட்டது. அவன் அகிரிப்பா ராஜாவின் முன் சாட்சி கொடுக்கிறான். சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து பிரகாசிக்கக் கண்டேன் (அப்.26:13) கர்த்தரின் ஒளி சூரியனுடைய பிரகாசத்திலும் அதி பயங்கரமான ஒளி. தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை.
யோசுவா கர்த்தரை நோக்கி பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக சூரியனே நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள் என்றான் (யோசு.10:12)
இஸ்ரவேல் மக்களை கர்த்தர் பகலில் மேக ஸ்தம்பத்தினாலும், இரவில் அக்கினி ஸ்தம்பத்தினாலும் வழி நடத்தினார். அவர்களுக்கு ஒரு சேதமும் வரவில்லை. இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக எருசலேம் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாஜுசின் ராஜா, எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களும் அவர்களுடைய எல்லா யுத்த சேனைகளும் இஸ்ரவேல் மக்களை அழிக்கும் படியாக கிபியோனுக்கு முன்பாகப் பாளையமிறங்கினார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கும், ஐந்து ராஜாக்களும் ஒன்று சேர்ந்து மகா பெரிய யுத்தம் உண்டானது.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு துணை நின்றார். ஐந்து ராஜாக்களையும் கிபியோனிலே மகா சங்காரமாக மடங் கடித்து முறியடித்தார்கள். யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தபோது யோசுவா என்ற தேவ மனிதன், ‘சூரியனே நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள்’ என்று கட்டளை கொடுத்தான்.
உடனே சூரியன் அஸ்தமிக்காமல் ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. இரவில் சந்திரனும் அப்படியே நின்றது. கர்த்தர் ஐந்து ராஜாக்களையும் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒப்புக் கொடுத்தார். கர்த்தர் யுத்தம் செய்தார். ஐந்து ராஜாக்களும் யுத்த சேனைகளும் நிர்மூலமாக்கப்பட்டார்கள்.
யுத்தத்திலே தமது மகிமையின் அறிவாகிய ஒளியை தோன்றப் பண்ணும் பொருட்டாக இஸ்ரவேல் மக்களின் இருதயங்களிலே பிரகாசித்தார். அவர் ஒருவரும் சேரக்கூடாத ஒளியிலே வாசம் பண்ணுகிறார். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவர் ஒளியாக இருக்கிறார்.
ஆமென்
அனைத்தும் தேவனுடைய வார்த்தை மூலமாக உண்டாயிற்று. உயிருள்ள அனைத்தும் அவரால் உருவாக்கப்பட்டு உயிர் பெற்றன. கர்த்தருக்குள் ஜீவன் இருக்கிறது. அந்த ஜீவனில் இருந்து மனிதனுக்கு ஒளி தோன்றிற்று. கர்த்தரின் ஒளியானது இருளிலே பிரகாசித்தது. எந்த இருளும் அந்த ஒளியை மறைக்க முடியவில்லை.
இயேசு சொன்னார், ‘நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைவான்’ என்றார்.
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியை காணமாட்டான். அவன் இருளிலே இருக்கிறான். இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியமாட்டான். துன்மார்க்கனின் ஒளி அவர்களை விட்டு எடுபட்டு போகும்.
சத்தியத்தின்படி ஜீவிக்கிறவன் ஒளியினிடத்திற்கு வருகிறான். ஒளி உங்களோடு இருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகள். எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. ஞானவான்களை ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போல் வைக்கின்றார். அப்பொழுது உன் ஒளி வந்தது. கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. ஒரு மனிதனின் கண்களின் ஒளி அவன் இருதயத்தைப் பூரிப்பாக்கும்.
‘தேவரீர் எங்களுக்கு இரங்கி எங்களை ஆசீர்வதித்து உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப் பண்ணும்’ (சங்.67:2).
யூதேயா தேசத்திலும், எருசலேம் பட்டணத்திலும், கலிலேய தேசத்திலும் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்த போது எல்லாருக்கும் அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கின படியினாலே, மக்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகை தேடினார்கள். அதைபோல் நமது சரீரம் முழுவதும் பெலவீனம் அடைந்து மூழ்கி போகின்ற நேரத்தில் ஒளியை வஸ்திரமாகத் தரித்து இருக்கிறவர், சுத்த ஒளியான கர்த்தர் நமது உடல் முழுவதும் பெலவீன பகுதிகளில் அவரது ஒளியால் சுகம், பெலன் ஆரோக்கியத்தை கட்டளை இடுகிறார்.
கர்த்தருடைய முகத்தின் ஒளியை நம்மேல் பிரகாசிக்கப் பண்ணுகிறார். அப்பொழுது சரீரத்தில் உள்ள வியாதி என்ற இருளின் அதிகாரங்கள் மாறி ஒளியின் கிருபையை தரித்துக் கொள்கின்றோம்.
‘நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்’. (யோவா.9:5)
சவுல் என்பவன் கர்த்தருடைய சீடரை கொலை செய்யும்படி தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் இயேசு தரிசனமானார். உடனே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது ஒளியிலிருந்து ஒரு சத்தம் உண்டாகி ‘சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?’ என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தை கேட்டான். அதற்கு அவன், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்றான். அதற்கு கர்த்தர், ‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்’ என்றார்.
ஒளியா இருக்கிற கர்த்தர் அனனியா என்ற தேவ மனிதனை அனுப்பி அவன் பார்வை பெற்றான். சவுல் என்ற மனிதன் பெயர் பவுல் ஆக மாற்றப்பட்டது. அவன் அகிரிப்பா ராஜாவின் முன் சாட்சி கொடுக்கிறான். சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து பிரகாசிக்கக் கண்டேன் (அப்.26:13) கர்த்தரின் ஒளி சூரியனுடைய பிரகாசத்திலும் அதி பயங்கரமான ஒளி. தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை.
யோசுவா கர்த்தரை நோக்கி பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக சூரியனே நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள் என்றான் (யோசு.10:12)
இஸ்ரவேல் மக்களை கர்த்தர் பகலில் மேக ஸ்தம்பத்தினாலும், இரவில் அக்கினி ஸ்தம்பத்தினாலும் வழி நடத்தினார். அவர்களுக்கு ஒரு சேதமும் வரவில்லை. இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக எருசலேம் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாஜுசின் ராஜா, எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களும் அவர்களுடைய எல்லா யுத்த சேனைகளும் இஸ்ரவேல் மக்களை அழிக்கும் படியாக கிபியோனுக்கு முன்பாகப் பாளையமிறங்கினார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கும், ஐந்து ராஜாக்களும் ஒன்று சேர்ந்து மகா பெரிய யுத்தம் உண்டானது.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு துணை நின்றார். ஐந்து ராஜாக்களையும் கிபியோனிலே மகா சங்காரமாக மடங் கடித்து முறியடித்தார்கள். யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தபோது யோசுவா என்ற தேவ மனிதன், ‘சூரியனே நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள்’ என்று கட்டளை கொடுத்தான்.
உடனே சூரியன் அஸ்தமிக்காமல் ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. இரவில் சந்திரனும் அப்படியே நின்றது. கர்த்தர் ஐந்து ராஜாக்களையும் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒப்புக் கொடுத்தார். கர்த்தர் யுத்தம் செய்தார். ஐந்து ராஜாக்களும் யுத்த சேனைகளும் நிர்மூலமாக்கப்பட்டார்கள்.
யுத்தத்திலே தமது மகிமையின் அறிவாகிய ஒளியை தோன்றப் பண்ணும் பொருட்டாக இஸ்ரவேல் மக்களின் இருதயங்களிலே பிரகாசித்தார். அவர் ஒருவரும் சேரக்கூடாத ஒளியிலே வாசம் பண்ணுகிறார். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவர் ஒளியாக இருக்கிறார்.
ஆமென்