ஆன்மிகம்
ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று தொடங்குகிறது
ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
ராஜாவூரில் புகழ்பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான இன்று காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், அன்பியங்களின் கலைவிழா நடக்கிறது.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நவநாள் நற்கருணை ஆசீரும், இரவு 9 மணிக்கு புனித ஜார்ஜியார் நாடகமும் நடக்கிறது.
8-ந் தேதி பகல் 11 மணிக்கு அன்பின் விருந்து, இரவு 9 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
13-ந் தேதி மாலையில் ஜெபமாலை, திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. 14-ந் தேதி காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நவநாள் திருப்பலி, 6.15 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி போன்றவை நடைபெறும். திருவிழா இறுதி நாளான 15-ந் தேதி காலை 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், மாலை 7 மணிக்கு தேரில் திருப்பலியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ரால்ப் கிராண்ட் மதன், இணைப்பங்கு அருட்பணியாளர் சுதர்சன், பங்கு பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர், துணை செயலாளர் ஜீங்வின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாய ஜோஸ் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நவநாள் நற்கருணை ஆசீரும், இரவு 9 மணிக்கு புனித ஜார்ஜியார் நாடகமும் நடக்கிறது.
8-ந் தேதி பகல் 11 மணிக்கு அன்பின் விருந்து, இரவு 9 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
13-ந் தேதி மாலையில் ஜெபமாலை, திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. 14-ந் தேதி காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நவநாள் திருப்பலி, 6.15 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி போன்றவை நடைபெறும். திருவிழா இறுதி நாளான 15-ந் தேதி காலை 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், மாலை 7 மணிக்கு தேரில் திருப்பலியும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ரால்ப் கிராண்ட் மதன், இணைப்பங்கு அருட்பணியாளர் சுதர்சன், பங்கு பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர், துணை செயலாளர் ஜீங்வின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாய ஜோஸ் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.