ஆன்மிகம்
புனித சவேரியார் ஆலய தேர்பவனி

புனித சவேரியார் ஆலய தேர்பவனி

Published On 2019-12-16 04:03 GMT   |   Update On 2019-12-16 04:03 GMT
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் உள்ள புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன் தினம் காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தென்னூர் பகுதியில் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News