ஆன்மிகம்
புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய தேரோட்டம்
புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.
புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி நவநாள் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.
நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆடம்பர தேரோட்டம் நடைபெற்றது. இதில் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். மாலையில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை எடிசன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆடம்பர தேரோட்டம் நடைபெற்றது. இதில் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். மாலையில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை எடிசன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.