ஆன்மிகம்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை

Published On 2019-04-22 03:58 GMT   |   Update On 2019-04-22 03:58 GMT
ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இயேசுநாதர் நற்போதனைகள் மனிதர்களை வாழவைக்கும் மந்திர சொற்களாக அமைந்தன. இதனைக்கண்டு இயேசுநாதர் மீது பொறாமை கொண்டவர்கள், அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கதா மலையில் சிலுவையில் அறைந்தனர்.

இந்த நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கடை பிடித்து வருகிறார்கள். அதுபோல் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார். இந்த நாள் வெற்றி திருநாளாகவும், மகிழ்ச்சி திருநாளாகவும் ஈஸ்டர் பண்டிகை என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

திருப்பூர்-அவினாசி ரோட்டில் உள்ள பங்களா பஸ் நிறுத்தத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை ஈஸ்டர் பண்டிகையையொட்டி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆயர் வில்சன் குமார் தேவசெய்தி வழங்கினார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி அதிகாலையில் இருந்தே பலர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர்.

இதுபோல் சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், குமார்நகர் புனித சூசையப்பர் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 
Tags:    

Similar News