ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மன அமைதி பெறவும், உலக நன்மைக்காகவும் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது.
பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மன அமைதி பெறவும், உலக நன்மைக்காகவும் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதில் பாப்பாக்குடி தியான மைய இணை இயக்குனர் மார்ட்டின்ராஜா தலைமை தாங்கினார். இதில் பூண்டி மாதாவின் தேர்பவனி நடந்தது.
அப்போது பக்தர்கள் பிரார்த்தனை பாடல்களை பாடியபடி ஊர்வலம் வந்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைசாமி மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பக்தர்கள் பிரார்த்தனை பாடல்களை பாடியபடி ஊர்வலம் வந்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைசாமி மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.