ஆன்மிகம்

ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி

Published On 2018-09-11 03:06 GMT   |   Update On 2018-09-11 03:06 GMT
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில கொடியேற்றத்துடன் தொடங்கியது. வண்ண விளக்குகள் மல்லிகை மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவுபெற்றது.

திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், எஸ்.வி.டி. உதவி பங்குதந்தை யூஜின்டென்சிங் அடிகளார், ஆன்மிக குரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர், அன்பியங்கள், பங்குமக்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News