ஆன்மிகம்
வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழா
வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்பவனியின் போது திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது.
விழா காலங்களில் தினமும் காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், நண்பகல், பிற்பகல் 3 மணிக்கு ஜெபமாலையும் மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஜான் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் அன்னையின் தேர் பவனி நடந்தது. காலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு நன்றி வழிபாடு நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு தேரில் வைத்து திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும், தொடர்ந்து முழு இரவு செபமாலையும் நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நிறைவுத் திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் மற்றும் பங்குப்பேரவை இறைமக்களும் செய்து வருகின்றனர்.
விழா காலங்களில் தினமும் காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், நண்பகல், பிற்பகல் 3 மணிக்கு ஜெபமாலையும் மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஜான் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் அன்னையின் தேர் பவனி நடந்தது. காலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு நன்றி வழிபாடு நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு தேரில் வைத்து திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும், தொடர்ந்து முழு இரவு செபமாலையும் நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நிறைவுத் திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் மற்றும் பங்குப்பேரவை இறைமக்களும் செய்து வருகின்றனர்.