ஆன்மிகம்
புதுக்குடியிருப்பு புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் புதுக்குடியிருப்பில் புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இன்று திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை செயலாளர் பெலிக்ஸ் தலைமை தாங்க, பொருளாளர் இவாஞ்சலின் பெஸ்கி மறையுரை ஆற்றுகிறார். நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் அமுதவளன் தலைமை தாங்க, அருட்பணியாளர் அமல்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். தினமும் காலை திருப்பலி, மாலை ஜெபமாலை நடக்கிறது. 13-ந்தேதி மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நடைபெறுகிறது.
15-ந்தேதி காலை 6 மணிக்கு மரியன்னையின் விண்ணேற்பு மற்றும் சுதந்திர தினவிழா சிறப்புத்திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் விமல்ராஜ் தலைமை தாங்க, அருட்பணியாளர் பிலிப் ஏ.திவ்யன் மறையுரை ஆற்றினார். 16-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது.
19-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் டோமினிக் கடாட்சதாஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் தார்சியுஸ்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலியும், 8 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் பெர்பெச்சுவெல் ஆன்டனி தலைமை தாங்க, அருட்பணியாளர் ரசல்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு கொடி இறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்று திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை செயலாளர் பெலிக்ஸ் தலைமை தாங்க, பொருளாளர் இவாஞ்சலின் பெஸ்கி மறையுரை ஆற்றுகிறார். நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் அமுதவளன் தலைமை தாங்க, அருட்பணியாளர் அமல்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். தினமும் காலை திருப்பலி, மாலை ஜெபமாலை நடக்கிறது. 13-ந்தேதி மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நடைபெறுகிறது.
15-ந்தேதி காலை 6 மணிக்கு மரியன்னையின் விண்ணேற்பு மற்றும் சுதந்திர தினவிழா சிறப்புத்திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் விமல்ராஜ் தலைமை தாங்க, அருட்பணியாளர் பிலிப் ஏ.திவ்யன் மறையுரை ஆற்றினார். 16-ந்தேதி இரவு 9 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது.
19-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் டோமினிக் கடாட்சதாஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் தார்சியுஸ்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. 20-ந்தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலியும், 8 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் பெர்பெச்சுவெல் ஆன்டனி தலைமை தாங்க, அருட்பணியாளர் ரசல்ராஜ் மறையுரை ஆற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு கொடி இறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.