ஆன்மிகம்
வடக்கன்குளம் பரலோக அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
ராதாபுரம் தாலுகா வடக்கன்குளம் பரிசுத்த திருகுடும்ப ஆலய பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ராதாபுரம் தாலுகா வடக்கன்குளம் பரிசுத்த திருகுடும்ப ஆலய பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 5 மணி, 6.45 மணி, 8.30 மணிக்கு காவல்கிணறு பங்குதந்தை மிக்கேல் மகிழன் தலைமையில் திருமுழுக்கு திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி பவனியாக கொண்டு வரப்பட்டு, வள்ளியூர் பல்நோக்கு சேவா சங்க இயக்குனர் அன்புச்செல்வன் தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அருட்தந்தை ஜூலியன்ஸ் மறையுரை நிகழ்த்துகிறார்.
முன்னதாக இன்று (சனிக்கிழமை) காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பாவசங்கீர்த்தனமும், தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
1-ம் திருவிழா தீபஒளி தினமாகவும், 2-ம் திருவிழா புனித டோன்போஸ்கோ தினமாகவும், 3-ம் திருவிழா மல்லிகா அரிசி ஆலை தினமாகவும், 4-ம் திருவிழா மஸ்கட் வாழ் வடவை மக்கள் தினமாகவும், 5-ம் திருவிழா சவுதி வாழ் வடவை மக்கள் தினமாகவும், 6-ம் திருவிழா துபாய் வாழ் வடவை மக்கள் தினமாகவும், 7-ம் திருவிழா வடவை தினமாகவும், 8-ம் திருவிழா மும்பை வடவை மக்கள் தினமாகவும், 10-ம் திருவிழா சென்னை வாழ் வடவை மக்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ததேயூஸ் ராஜன் தலைமையில் பங்கு நிதி குழுவினர், அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்து வருகிறார்கள்.
முன்னதாக இன்று (சனிக்கிழமை) காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பாவசங்கீர்த்தனமும், தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
1-ம் திருவிழா தீபஒளி தினமாகவும், 2-ம் திருவிழா புனித டோன்போஸ்கோ தினமாகவும், 3-ம் திருவிழா மல்லிகா அரிசி ஆலை தினமாகவும், 4-ம் திருவிழா மஸ்கட் வாழ் வடவை மக்கள் தினமாகவும், 5-ம் திருவிழா சவுதி வாழ் வடவை மக்கள் தினமாகவும், 6-ம் திருவிழா துபாய் வாழ் வடவை மக்கள் தினமாகவும், 7-ம் திருவிழா வடவை தினமாகவும், 8-ம் திருவிழா மும்பை வடவை மக்கள் தினமாகவும், 10-ம் திருவிழா சென்னை வாழ் வடவை மக்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ததேயூஸ் ராஜன் தலைமையில் பங்கு நிதி குழுவினர், அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்து வருகிறார்கள்.