ஆன்மிகம்
மேலத்தெருக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், மேலத்தெருக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், மேலத்தெருக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. திருவிழா வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி ஆகியன நடந்தது.
இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கூட்டுத்திருப்பலி தொடர்ந்து நற்செய்தி கூட்டம் நடைபெறுகிறது. வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
வருகிற 13-ந் தேதி காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 9 மணிக்கு அன்பின் விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
14-ந் தேதி மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கூட்டுத்திருப்பலி, இரவு 8 மணிக்கு நாடகம் ஆகியன நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கூட்டுத்திருப்பலி தொடர்ந்து நற்செய்தி கூட்டம் நடைபெறுகிறது. வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
வருகிற 13-ந் தேதி காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 9 மணிக்கு அன்பின் விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
14-ந் தேதி மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கூட்டுத்திருப்பலி, இரவு 8 மணிக்கு நாடகம் ஆகியன நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.